Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
text
stringlengths
314
440k
language
stringclasses
1 value
ஆசிரியை, பெண் சத்துணவு அமைப்பாளரின் கள்ள காதல்கள்: கொந்தளித்த பெற்றோர் தேனி: தேனி மாவட்டம் சடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பெண் சத்துணவு அமைப்பாளர் ஆகியோரின் கள்ளக் காதல்கள், களியாட்டங்களைக் கண்டித்து தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று அவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமை ஆசிரியை தனது அறையிலேயே கள்ளக் காதலருடன் சல்லாபம் செய்வதாகவும், அதேபோல, பள்ளியின் பெண் சத்துணவு அமைப்பாளர் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், சத்துணவு அறைக்குள்ளேயே அவர் காதல் களியாட்டத்தில் ஈடுபடுவதாகவும் சடையப்பட்டி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக உயர் கல்வி அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குமுறுகிறார்கள். இந்த நிலையில் இனி மேலும் பள்ளிக்குத் தங்களது பிள்ளைகளை அனுப்பினால் அவர்களின் மன நிலை பாதிக்கப்படும் என்று கருதிய அவர்கள் பள்ளிக்குள் புகுந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போடிநாயக்கனூர் தாசில்தார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். தலைமை ஆசிரியை மற்றும் சத்துணவு அமைப்பாளர் இருவரையும் மாற்றினால்தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவோம் என்று அவர்கள் உறுதியாகக் கூறினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்தே போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
tam
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இறந்த யானையின் தந்தங்களை விற்க முயன்ற இரண்டு வனத் துறை ஊழியா்கள் உள்பட 6 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைகளில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இதில் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்ஸ்லிப்(உலாந்தி) ஆகிய நான்கு வனச் சரகங்கள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியா்கள் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், பொள்ளாச்சி - ஆழியாறு சாலையில் நா. மூ. சுங்கம் பகுதியில் உள்ள தனியாா் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையத்தில் 2 யானை தந்தங்கள் சட்டவிரோதமாக விற்பனைக்கு வந்துள்ளதாக, மத்திய வன உயிரின குற்றத் தடுப்புக் குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் ஆரோக்கியராஜ் சேவியா் தலைமையில் அங்கு சென்ற வனத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ எடையுள்ள இரண்டு யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடா்பாக செல்லப்பிராணிகள் விற்பனை நிலைய உரிமையாளா் வால்பாறையைச் சோ்ந்த மணிகண்டன்(38), என்பவரிடம் வனத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், பொள்ளாச்சி வனச் சரகத்துக்கு உள்பட்ட ஆழியாறு வனப்பகுதியில் பணியாற்றும் அங்கலக்குறிச்சி ஜெ.ஜெ. நகா் பகுதியைச் சோ்ந்த சாமியப்பன் (30) என்ற வேட்டைத் தடுப்புக் காவலா் மற்றும் அவருடன் பணியாற்றும் தற்காலிகப் பணியாளா் காத்தவராயன் (40) ஆகிய இருவரும் ஆழியாறு வனப்பகுதியில் உள்ள வெடிக்காரன்பள்ளம் என்ற அடா்ந்த வனப் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரோந்து சென்றபோது, அங்கு இறந்த நிலையில் கிடந்த ஆண் யானையின் தந்தங்களை எடுத்து வந்து, கள்ளச் சந்தையில் விற்று தருமாறு கேட்டுக் கொண்டதாகவும், இதன்படி அங்கலக்குறிச்சி ஜெ.ஜெ . நகரைச் சோ்ந்த சிக்கந்தா் பாஷா (37), சாரதி (63), நந்தகுமாா் (39), ஆகிய மூன்று பேரும் இணைந்து தந்தங்களை விற்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, வனப் பகுதியில் இருந்து இறந்த யானையின் தந்தங்களை எடுத்து சட்டவிரோதமாக விற்க முயன்ற வேட்டைத் தடுப்புக் காவலா் சாமியப்பன், தற்காலிகப் பணியாளா் காத்தவராயன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்த பொள்ளாச்சி வனத் துறையினா், அவா்களிடமிருந்து 6 கிலோ எடை கொண்ட யானை தந்தங்களை பறிமுதல் செய்து, 6 பேரையும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2 இல் ஆஜா்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
tam
குமரி அறிவியல் பேரவை, குழித்துறை சுழல் சங்கம் சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச் சூழல் மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரைகள் அனுப்புமாறு கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் கூறியது: கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் மனிதத் தாக்கம் என்ற தலைப்பில் குமரி அறிவியல் பேரவையும், குழித்துறை சுழல் சங்கமும் இணைந்து ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தல் மற்றும் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் கோரப்படுகிறது. இதில், பிப். 20 ஆம் தேதிக்குள் முதற்கட்டமாக ஒரு பக்க அளவில் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் அனுப்ப வேண்டும். அதிலிருந்து தோ்வு செய்யப்படுபவா்கள் பிப். 29 ஆம் தேதிக்குள் 5 பக்க அளவில் முழு ஆய்வுக் கட்டுரையும் அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின்னா் தோ்வு செய்யப்படும் 20 நபா்களின் ஆய்வுக் கட்டுரைகள் மாா்ச் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநாட்டு நிகழ்வில் சமா்ப்பிக்க வேண்டும். அக்கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும். கன்னியாகுமரி மாவட்ட இயற்கை வளம் பாதுகாக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பல்வேறு சூழலியல் அறிஞா்கள் பங்கேற்க உள்ளனா். கூடுதல் விவரங்களை 99427 58333 என்ற செல்லிடப் பேசியில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tam
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பை கிரேன் சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் நிறுத்தி வைத்தனர். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பை கிரேன் சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் நிறுத்தி வைத்தனர். கொரோனா பரவல் மற்றும் தேர்தல் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்ட காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து முடங்கியது. தற்போது விக்ரம் என்ற படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி உள்ளார். ஷங்கரும் தமிழ், தெலுங்கு மொழிகளில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்தியில் ரன்வீர்சிங்கை வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்யப் போவதாகவும் அறிவித்தார். இந்தியன்-2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்கும்படி பட நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றது. ஆனால் ஷங்கர் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது. இதையடுத்து ராம்சரண் படத்தை இயக்கும் பணியில் ஷங்கர் தீவிரமாகி உள்ளார். ராம் சரண், தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ ஆகியோர் சென்னை வந்து ஷங்கரை சந்தித்து படப்பிடிப்பை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இதனால் இந்தியன்-2 படத்தின் கதி என்ன ஆகும் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
tam
இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் உள்ளூர் மக்களுக்கு பரவுவதை தடுப்பதற்கான சிறந்த வழிமுறை அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக இலங்கையின் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று இதனை அவர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 26 முதல் வெளிநாட்டினரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் அமுல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வருவதற்கு சில சாதகமான அறிகுறிகளைக் காண்பிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையை நம்பியுள்ள கிட்டத்தட்ட இருபது லட்சம் மக்கள், கடந்த எட்டு மாதங்களாக தமது வாழ்வாதாரத்தில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இவர்களுக்கு சுற்றுலாத்துறையின் புதிய ஏற்பாடுகள் உதவும்.எனவே, இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை முறையான பொறிமுறையின் கீழ் கொண்டு வருவது சுற்றுலாத்துறையை உயர்த்தும் என்று நம்புவதாகவும் இராணுவத்தளபதி கூறியுள்ளார்.
tam
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி ஆட்சியின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியினால் தான் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறலும், தாக்குதலும் தொடர்கிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிற வகையில், பாரம்பரியமாக பங்கேற்கிற கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பது எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரதமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. ேமலும், ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில், வரும் 27ம்தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். அதைத் தொடர்ந்து, 28ம் தேதி குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
tam
33% பெண்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார்கள்.. பிஜு ஜனதா தளம் அதிரடி.. நவீன் பட்நாயக் புரட்சி! புவனேஷ்வர்: லோக்சபா தேர்தலில் ஒடிசாவில் போட்டியிடும் பிஜு ஜனதா தளம் கட்சியை வேட்பாளர்களில் 33% பேர் பெண்களாக இருப்பார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். லோக்சபா தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான பணிகள் இப்போதே நடந்து வருகிறது. இந்த தேர்தலுக்கு எல்லா மாநிலம் போலவே ஒடிசாவும் தீவிரமாக தயாராகி வருகிறது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் - பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒடிசாவில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சேரவில்லை ஆனால் இந்த கூட்டணி நினைத்தபடி உருவாக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இடம்பெறாது என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்தார். அறிவிப்பு ஒடிசாவில் மொத்தம் 21 லோக்சபா தொகுதிகள் உள்ளது. இதில் அனைத்திலும் பிஜு ஜனதா தளம் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதில் 33% பெண்கள் போட்டியிடுவார்கள் என்று நவீன் பட்நாயக் தெரிவித்து இருக்கிறார். சூப்பர் அதன்படி மொத்தம் 7க்கும் அதிகமான தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அங்கு மொத்தம் தற்போது 2 பெண் எம்பிக்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதேபோல் அங்கு லோக்சபா தேர்தலுடன் ஒடிசா சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. இதனால் அதிலும் 33% பெண்கள் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. என்ன தீர்மானம் 147 சட்டமன்ற உறுப்பினர்களில் 7 சட்டமன்ற பெண் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று நவீன் பட்நாயக் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். கடந்த நவம்பரில்தான் அங்கு சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு கொண்டு வர சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
tam
லட்சத்தீவை சேர்ந்த நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு..! அண்மையில் லட்சத்தீவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பல ஹேஸ்டாக்குகள் வலம் வந்தன. ஒன்றிய அரசு லட்சத்தீவுக்கு புதிய நெருக்கடி கொடுத்து வருவதாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த விவாகாரத்தில் பெண் இயக்குநர் ஒருவர் லட்சத்தீவில் ஒன்றிய அரசு கொரோனாவை பரப்பியதாக கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெண் இயக்குனருக்கு புகாரும் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவு மக்கள் மீது கொரோனாவை உயிரி ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆயிஷாவின் பேச்சு நாட்டுக்கு எதிரான செயல் எனக் கூறி லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதர் கவரட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்துத் தேசத்துரோகம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு ஆகிய பிரிவுகளில் ஆயிஷா சுல்தானா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக ஆயிஷா சுல்தானாவிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லட்சத்தீவில் கடந்த ஆண்டு ஒருவருக்குக் கூட கொரோனா இல்லாத நிலையில், டிசம்பரில் நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் பொறுப்பேற்ற பிறகு, விதிகள் தளர்த்தப்பட்டதால் இதுவரை மொத்தம் எட்டாயிரத்து முந்நூறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
tam
விமானத்தில் தமிழிசை பார்த்து பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட கனடாவில் ஆராய்ச்சி படிப்பு முடிந்து திரும்பிய தூத்துக்குடி மாணவி கைது.!! தூத்துக் குடி சென்ற விமானத்தில் பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விமானத்தில் தமிழிசை இருக்கைக்கு பின் அமர்ந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மகள் சோபியா, கனடாவில் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு பெற்றோருடன் தூத்துக்குடி வந்துள்ளார். இதனையடுத்து தமிழிசை சவுந்தரராஜனை கண்டதும் சோபியா ஆத்திரத்தில் பாஜக அரசின் பாசிச ஒழிக்க என்று முழக்கமிட்டுள்ளார். இதனை கேட்ட பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பெரில் புதுக்கோட்டை போலீசார் பெண் சோபியா மீது 209, 505 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பாஜகவினர் 10 பேர் தங்கள் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தாக சோபியாவில் தந்தை கிருஷ்ணசாமி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவியை போலீஸ் கைது செய்தது அராஜக செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் தலைவரான தமிழிசை பெருந்தன்மையுடன் நடந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.* தமிழிசை அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என இயக்குநர் கவுதமன் வலியுறுத்தியுள்ளார். தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்த மாணவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி. மகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் பாஜக அரசை விமர்சித்தால் கைது செய்யப் படுவார்களா !! அப்படியென்றால் நானும் விமர்சிக்கிறேன் பாஜக பாசிச அரசு ஒழிக என்று கூறுகிறேன். என்னையும் கைது செய்வார்களா எனக் கூறினர்.
tam
இந்த வாரம் பிக் பாஸ் யில் வெளியேறபோவது யார் என்று தெரியுமா ? பிக் பாஸ் 3 ,பதினாறு போட்டுயாளர்களுடன் தொடங்கி மிக சுவாரசியமாக நடந்து கொண்டு இருக்கிறது . இதில் முதல் நபராக பாத்திமா பாபு வெளியேற்ற பட்டார் .இதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற்றப்பட்டார்கள் .இதில் சில வாரங்களுக்கு பிறகு போட்டியாளர் சரவணன் சில காரணகளால் போட்டியின் பாதியில் இருந்தே வெளியேற்றப்பட்டார். இதே போல் போட்டியாளர் மதுவும் தற்கொலை முயற்சி செய்து போட்டியின் விதிமுறையை மீறியதால் அவரும் வெளியேற்றப்பட்டார்.இதை தொடர்ந்து சுவாரசியமாக சென்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3 வது நபராக வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் ரீ என்ட்ரி யாக உள்ளே வந்து பல சண்டைகளுக்கு காரணமாக இருந்தார் இறுதி நிலையை நெருங்கிய பிக் பாஸ் 8 போட்டுயாளர்களுடன் நடந்து வந்தது சென்ற வாரம் மக்களின் வாக்கு எண்ணிக்கையால் வனிதா விஜயகுமார் வெளியேற்றபட்டார். இப்போது பல போட்டிகளுடன் 7 போட்டியாளர்களுடன் போட்டி கடும் பரபரப்பாக நடந்து வருகிறது . எனவே இந்த வாரம் நோமிநாட் ஆனவர்கள் கவின்,சேரன் ,ஷெரின் மற்றும் லாசலியா .இதில் கவின் மற்றும் லாசலியாவிற்கு மக்களிடம் அதிக ஆதரவு இருப்பதால் . இவர்களில் சேரன் மற்றும் ஷெரின் வெளியேற்வார்கள் என சமூகவளைத்தலகளில் பெரிதும் பேசப்படுகிறது .
tam
வியன்னா அலுவலக மேசை தயாரிப்பு விவரம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு குறிச்சொற்கள் பெயர்: அலுவலக மேசை மாதிரி: வியன்னா அடிப்படை பொருள்: E1 நிலை சுற்றுச்சூழலுக்கு உகந்த துகள் பலகை பயன்படுத்தப்படுகிறது, மற்றும் அடர்த்தி 700kg/m3 க்கும் அதிகமாக உள்ளது, மேலும் ஈரப்பதம், பூச்சி-ஆதாரம் மற்றும் அரிக்கும் எதிர்ப்பு இரசாயன சிகிச்சைக்குப் பிறகு ஈரப்பதம் 10% க்கும் குறைவாக உள்ளது; பினிஷ்: இறக்குமதி செய்யப்பட்ட பிராண்ட் ஃபயர்ப்ரூஃப் பேனல் ஃபினிஷ் பயன்படுத்தப்படுகிறது, நல்ல ஆஸ்டிஜிமாடிசம் உள்ளது மற்றும் கண்களுக்கு தூண்டுதலை குறைக்க முடியும், மேலும் இது 7200 ஆர்பிஎம் அணிய எதிர்ப்பு மற்றும் சமநிலையை பராமரிக்க நிலையான உள் மற்றும் வெளிப்புற பதற்றம் கொண்டது; எட்ஜ் பேண்டிங்: அனைத்து பேனல்களும் இரட்டை வெனீர் மற்றும் நான்கு பக்கங்களிலும் சீல் வைக்கப்பட்டுள்ளன (மறைக்கப்பட்ட பாகங்கள் மூடப்பட்டுள்ளன), மற்றும் பேனல்களின் நிறம் மற்றும் அமைப்புடன் பொருந்தும் 2 மிமீ தடிமனான உயர்தர பிவிசி எட்ஜ்-பேண்டுகள் அனைத்து வெளிப்புற விளிம்பு பேண்டிங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன; அட்டவணை சட்டகம்: காப்புரிமை பெற்ற தனிப்பயன் அட்டவணை சட்டகம். வன்பொருள் பொருத்துதல்கள்: இறக்குமதி செய்யப்பட்ட இணைப்பிகள், கீல்கள், மூன்று-கூட்டு அமைதியான ஸ்லைடுகள் மற்றும் அமைச்சரவை கதவுகள் மற்றும் டிராயர் கைப்பிடிகள்; கலவை: புஷ் அமைச்சரவை, பிரதான சட்டகம், விசைப்பலகை சட்டகம் மற்றும் இணைக்கப்பட்ட அட்டவணை; உற்பத்தி செயல்முறை மற்றும் அமைப்பு செயல்திறன் விளக்கம்: இரட்டை வயரிங் துளை அல்லது வயரிங் பள்ளம், மறைக்கப்பட்ட வயரிங் செயல்பாடு.
tam
அட்டரி-வாகா எல்லையில் பாரம்பரிய முறைப்படி இறக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் கொடிகள். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அட்டரி பகுதி அமைந்துள்ளது. அதே போல் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இந்திய எல்லை அருகே வாகா பகுதி அமைந்துள்ளது. இந்த அட்டரி-வாகா எல்லையில் இருநாட்டு ‘பின்வாங்கு முரசறை’ (Beating the Retreat) என்று அழைக்கப்படும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்த கொடியிறக்க நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். இதில் இந்தியாவின் பக்கத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தானின் பக்கத்தில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த ரேஞ்சர்ஸ்களும் பங்கேற்பார்கள். இந்நிலையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு, கொடியிறக்கும் நிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமான மக்கள் அட்டரி-வாகா எல்லையில் குவிந்தனர். இதையடுத்து பாரம்பரிய முறைப்படி கொடி இறக்கப்பட்டு, அங்கிருக்கும் இரும்பு கதவு மூடப்பட்டது. இந்த நிகழ்வுகளை அங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
tam
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence - AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருந்தது தெரியவந்தது. இந்த ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக் குழுவில் உள்ள லுக் ஓக்டென்-ரேனர் கூறுகையில், ஒருவரின் உடலில் வருங்காலத்தில் ஏற்படும் மாற்றங்களை கணிப்பது மிகவும் உபயோகமானது. ஏனெனில் அதற்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதிலும் ஒருவர் எவ்வளவு ஆண்டுகாலம் வாழ்வார், என்பதை மருத்துவர் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான ஒன்று. அந்த வகையில் ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். எங்களின் இந்த ஆராய்ச்சி மருத்துவ பட பகுப்பாய்வுத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒரு புதிய வாயிலை திறந்துள்ளது. வருங்காலத்தில் இந்த தொழில்நுட்பம் நோய்களை வரும் முன்பே கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை முன்கூட்டியே அளிக்க உதவும் என்று கூறியுள்ளார்.
tam
priyanka chopra sexy vedio தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. சினிமா துறையில் தற்போது வெற்றிகரமாக வலம் வருகிறார். நடிப்பு தவிர ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை போன்ற சமூக விழிப்புணர்வு பிரசார பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆங்கில டெலிவிஷன் தொடர்களில் நடித்து ஹாலிவுட் பட உலகிலும் கால் பதித்து உள்ளார். பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். மேலும் இவர் ஸ்டைல் என்ற பெயரில் தற்போது மிகவும் மோசமான உடைகளை அணிய ஆரம்பித்துவிட்டார்கள். ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் ஒரு போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.அதில் மேலே சரியாக உடை அணியாமல் அந்த உடையிலேயே ஒரு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Advertisement
tam
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கும் அங்கொட லொக்காவுக்கும் தொடர்பு – இந்திய தேசிய விசாரணை ஆணையம் விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினரான சபேசன் என அழைக்கப்படும் 47 வயதுடைய சற்குணத்துக்கும் அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மட்டுமகே சந்தன லசந்த பெரேரா மற்றும் அவரது சகாக்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருந்தன என தமிழ்நாடு குற்றவிசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும், போதைப்பொருட்களையும் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கடந்த அக்டோபர் (20210 இல் சபேசன் இந்திய தேசிய விசாரணைப் பிரிவினால் சென்னையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதே வேளைஇலங்கை அரசினால் தேடப்பட்டுவந்த அங்கொட லொக்கா எனப்படும் 35 வயதுடைய மட்டுமகே சந்தன லசந்த பெரேரா, ஜூலை 3,2020 அன்று கோயம்புத்தூரில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்தபோது மாரடைப்பினால் மரணமுற்றதாகக் கூறப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட தமிழ்நாடு குற்ற விசாரணைப் பிரிவு (Tamilnadu Crime Branch (TN-CB)) தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் சபேசனுக்கும் அங்கொட லொக்காவுக்குமிருந்த தொடர்புகள் பற்றித் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒளிந்திருந்த அங்கொட லொக்காவைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்ட தமிழ்நாடு குற்றவிசாரணைப் பிரிவு தற்போது சபேசன், அவரது சகாக்களான ஒரு இந்தியப் பிரஜையையும் இன்னுமொரு இலங்கைப் பிரஜையையும் கைதுசெய்துள்ளது. இவர்கள் மூவரையும் விசாரணைக்குட்படுத்தியபோது அங்கொட லொக்கா மற்றும் அவரது நணபர் லாடிய எனப்படும் சானுகா தனநாயக்கா ஆகியோருக்கும் இம் மூவருக்கும் இருந்த தொடர்புகள் தெரியவந்ததாக குற்ற விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் பி.சிவகுமார் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதர வன்முறைக்குழுக்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சபேசன் மற்றும் சின்ன சுரேஷ் எனப்படும் அவரது சகாவும் சென்னைக்கு வந்ததாகவும் அவர்களின் உதவியுடன் அங்கொட லொக்கா மற்றும் லாடியாவும் சென்னைக்கு வந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன. பிரதாப் ப்சிங்க் என்ற பெயரில் கோயம்புத்தூரில் மறைந்து வாழ்ந்த அங்கொட லொக்கா பின்னர் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தபோது சந்தேகத்துக்குரிய முறையில் மரணமடைந்திருந்தார். அவரது மரணம் தொடர்பாக தமிழ்நாடு குற்ற விசாரணைப் பிரிவு விசாரணகளை மேற்கொண்டு வந்ததிருந்தது. லொக்காவின் உதவியாளரான லாடியாவை பெங்களூருவில் மறைந்துவாழ உதவிசெய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜயப்பிரகாஷ் மற்றும் லாடியாவின் வாக்குமூலங்களிலிருந்து லொக்கா குழுவுக்கும் சபேசன், சின்னசுரேஷ் மற்றும் சவுந்தரராஜன் ஆகியோருக்குமிடையிலான தொடர்புகள் தற்போது வெளிவந்திருப்பதாக அறியப்படுகிறது. இதே வேளை, மார்ச் 18, 2021 இல் இந்திய கடற்காவல் படையினால் மினிகோய் கரையில் வைத்து விழிஞம் ஆயுதக் கடத்தல் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட ஆறு இலங்கையரைத் தொடர்ந்து சபேசன், சின்ன சுரேஷ், சவுந்தரராஜன் ஆகியோரையும் இந்திய தேசிய விசாரணைப் பிரிவு கைதுசெய்திருந்தது. விழிஞம் ஆயுதக் கடத்தலின்போது ஏ.கே.47 ரைபிள்களும், 1,000 ரவைகள் மற்றும் 300 கி.கி. ஹெரோயின் ஆகியவற்றுடன் மூன்று மீன்பிடிப்படகுகள் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய விசாரணைப் பிரிவு சபேசன் குழுவினரைக் கைதுசெய்திருந்தது. லொக்காவின் மரணத்திற்குப் பிறகு லாடியா போதைப்பொருள் வியாபாரத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்ததாகவும், அதே வேளை ஆயுதம் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்படவிருந்ததாகவும் இந்திய தேசிய விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவிலுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் சபேசன் தொடர்புகளைப் பேணிவந்ததாகவும் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதே வேளை விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான மதுரையைச் சேர்ந்த தயானேஸ்வரன் என்பவரும், அவரது மகளும் வழக்கறிஞருமான சிவகாமசுந்தரி மற்றும் லொக்காவுடன் வாழ்ந்துவந்த அமானி டான்ஜி என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அங்கொட லொக்காவுக்கென வாங்கிய கைத்துப்பாக்கியை, லொக்காவின் மரணத்திற்குப் பிறகு தூர இடமொன்றில் நிலத்திற்குள் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக சிவகாமசுந்தரியும் அவரது தந்தையும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், தனது கணவனைக் கொன்றதற்காக லொக்காவை நஞ்சூட்டிக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமானியும் கைதுசெய்யப்படுல்ளதாகவும் இவை தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அறியப்படுகிறது. (தி ஹிந்து, ‘ஒன் மனோரமா)).
tam
அட்ராசக்க…! சென்னையில் ஓட்டுனர் இல்லாமல் மெட்ரோ ரெயில்… சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் முன்னிலையில், ஓட்டுனர் இல்லாம மெட்ரோ ரெயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆளில்லா முதல் மெட்ரோ ரெயில் 2024 - ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் . அதை தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத ரெயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். முதலில் சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரெயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் இரண்டில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும். மேலும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரெயில்களை உருவாக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
tam
தூய்மை பணிகளுக்கு தீர்வு காண swachhata செயலி தூய்மையான பாரதம் திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கெனவே ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், கழிவுகள் அகற்றுதல், அதைச் சார்ந்த பணிகளை நல்ல முறையில் திட்டமிடுதல், அவற்றை செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கு Swachhata செயலிஉதவியாக இருக்கின்றன. Swachhata செயலியின் உதவியால் மாநகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பொது மக்களின் குறைகளை விரைவில் தீர்த்து வருகின்றன. தூய்மையான பாரதம் (நகர்ப்புறம்) திட்டத்தின் வரம்புக்கு உள்பட்ட விஷயங்களில் பொது மக்களின் குறைதீர்வுக்கு ஏற்றவகையில் பிரபலமானதாக இந்தச் செயலி உள்ளது. நாடு முழுக்க 1.7 கோடி பேர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். swachata செயலி மூலம் எந்த நபரும் எளிதாகப் புகார்களைத் தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதால் இது மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். குடிமக்கள் எந்தப் பிரிவிலும் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் இந்த செயலியின் மூலம் கழிவுநீர் அகற்றுதல், பாதாள சாக்கடைகளில் ஏற்படும் பாதிப்பு, குப்பைத்தொட்டி தூய்மை இல்லாமல் இருத்தல்,தூய்மை பராமரிப்பில் ஈடுபடாமல் இருத்தல், விலங்குகளில் இருந்து கிடைப்பது அறிவித்தல், பொது கழிப்பறைகள் சுத்தம் செய்தல், அங்கு ஏற்படும் அடைப்புகள் குறித்த புகார்களுக்கு, பொது கழிப்பறைகளில் தண்ணீர் , மின்சாரம் ஆகியவை குறித்த பிரச்சினைகள் இருப்பின் புகார்கள் அளிக்க இந்த செயலியை பயன்படுத்தலாம். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் மூலம் விரைந்து பொதுமக்களுக்கு தீர்வளித்து வருகின்றனர். #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... #டெலிகிராம் மூலமும் அறிய..
tam
2019 ஐபிஎல் தொடர் லீக் ஆட்டங்கள் முடிவு பெறும் நிலையில் உள்ளன. தற்போது ஒவ்வொரு லீக் போட்டியும் புள்ளிப் பட்டியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். 45 வது லீக் ஆட்டம் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்னும் 11 லீக் போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள மூன்று இடங்களுக்கு ஒவ்வொரு அணியும் போட்டியிடுகின்றன. ஐபிஎல் விதிகள் படி, ஒரு அணியில் 8 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறலாம். இருப்பினும், ஆடும் லெவனில் நான்கு பேர் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவர். அந்த வகையில், இதுவரை ஆடும் லெவனில் இணைக்கப்படாத வீரர்கள் இனி வரும் போட்டிகளிலாவது இடம் பெறுவார்களா என்பது கேள்விக்குறிதான். எனவே, இனிவரும் போட்டிகளில் கட்டாயம் இடம் பெற வேண்டிய வெளிநாட்டு வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது. #1.மார்ட்டின் கப்தில்: டி20 போட்டிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களும் 100க்கும் மேற்பட்ட பவுண்டரிகளும் நான்கு சதங்களும் 42 அரைச்சதங்களையும் குவித்த வீரரான மார்ட்டின் கப்தில், ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். ஒருவழியாக 2016ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் காயத்தால் விலகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் லென்டில் சிம்மன்ஸ்க்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அடுத்து வந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 50 லட்சத்திற்கு ஒப்பந்தமானார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு எந்த அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை. ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்று உள்ளார். இந்த அணியில் இடம் பெற்ற இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ தாயகத்திற்கு திரும்பியதால், இனிவரும் போட்டிகளில் இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #2.பில்லி ஸ்டேன்லேக்: 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தமாகினார், பில்லி ஸ்டேன்லேக். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான இவர், அந்த சீசனில் வெறும் இரு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கனவே, அணியில் பல வெளிநாட்டு நட்சத்திரங்கள் உள்ளதால் ஆடும் லெவனில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், கடந்த ஐபிஎல் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடினார். குறைந்தபட்ச வாய்ப்புகளே இவருக்கு வழங்கப்பட்டதால், கடந்த இரு சீசன்களிலும் இவர் சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல, நடப்பு சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஏனெனில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். எனவே, இனிவரும் போட்டியிலாவது இவர் ஆடும் லெவனில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #3.மொய்சஸ் ஹென்ரிக்ஸ்: ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இடம்பெற்றும் வீரர்களில் ஒருவர், மொய்சஸ் ஹென்ரிக்ஸ். இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமானார். அடுத்த ஆண்டில் டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது. இருப்பினும், தனக்கு ஏற்பட்ட காயத்தால் அந்த தொடர் முழுவதுமே விலகினார். 2013ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இடம்பெற்றார். அடுத்த நான்கு ஆண்டுகள் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இவர் இணைந்துள்ளார். இதுவரை இவர் விளையாடிய 57 ஐபிஎல் போட்டிகளில் 969 ரன்களையும் 38 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். மேலும், இவர் ஐந்து அரைச்சதங்களையும் கடந்துள்ளார். பவுலிங்கில் இவரது எக்கானமி 8.38 என்ற வகையில் அமைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 32 ஆவது லீக் ஆட்டத்தில் ஆடும் பஞ்சாப் அணி லெவனில் இணைக்கப்பட்டார். இருப்பினும், ஆட்டம் துவங்குவதற்கு முன்பு செய்த பயிற்சியில் ஏற்பட்ட காயத்தால் அந்த போட்டியில் இருந்து விலகினார்.
tam
பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கென ஒரு பெரிய பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. சாய் பல்லவி பின் மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அதன் பின் சூர்யாவுடன் என்.ஜி.கே.படத்திலும் நடித்தார் பின் இவர் தமிழ் , மலையாளம் என பல மொழிகளிலும் படம் நடித்து வருகிறார் . புகைப்படம் இப்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி போடோக்களை வெளியிடுவது வழக்கமானது . பின் அவர் ஜாக்கெட் அணியாமல் பதிவிட்டுள்ள புகைப்படத்தினை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள் .
tam
கலிபோர்னியா: மலேசிய நாட்டில் ஸ்டார்லிங்க் புராஜக்டின் கீழ் சாட்டிலைட் மூலமாக இணைய சேவையை வழங்க எலான் மஸ்கின் ஸ்பேஸ்-X நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-X நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே சுமார் 32 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-X பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். இப்போது ஸ்டார்லிங்க் இணைய சேவை மலேசியாவில் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனை மலேசிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார் அந்நாட்டின் அமைச்சர் முகமது அஸ்மின் அலி. இருந்தாலும் விரைவில் இந்த திட்டம் உறுதி செய்யப்படும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் புதிய தொழில்நுட்பம் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்கின் வரவு அந்த நாட்டில் அதிவேக இணைய சேவையை பெற உதவும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஊரக பகுதிகளுக்கான இணைய சேவை இதன் மூலம் சிறப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்லிங்க் நிலை நிறுத்தியுள்ள சாட்டிலைட்களுக்கு தேவையான முக்கிய காம்போனென்ட்களை மலேசிய நிறுவனம் ஒன்றுதான் வழங்கி வருகிறதாம். இந்நிலையில், தங்கள் நாட்டில் ஸ்டார்லிங்கின் வரவு மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் தங்களது நிறுவனங்களின் பங்கீடு வரும் நாட்களில் இருக்கும் என விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட்டு வரும் மலேசிய நிறுவனங்கள் நம்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Sign up to receive our newsletter in your inbox every day!
tam
"அக்கா அக்கா" உமாவின் உலுக்கலில் நினைவிற்கு வந்தவள், சுதாரித்து கொண்டு கண்ணை துடைத்தாள். "போட்டோ குடுக்கா.அம்மா அப்பா ஞாபகம் என்கிட்டே இது மட்டும் தான் இருக்கு." என்றவள் பவித்ராவின் கையில் இருந்து அந்த புகைப்படத்தை வாங்கி புத்தகத்தின் நடுவே வைத்து கொண்டாள். அவள் கையில் இருந்து அந்த புகைப்படத்தை நீக்கினாலும் அது அவள் கண்ணிலேயே நின்றது. அந்த புகைப்படம் பற்றி நினைக்க நினைக்க அவள் உடல் எல்லாம் கூசியது. எழுந்து சென்று குளியலறையில் தண்ணீரை திறந்து விட்டு கொண்டு நின்றாள். எத்தனை நேரம் நின்றாலும் அந்த கறை போகவே இல்லை. உடல் சில்லிட்டு போனது. வெளியே இருந்து உமா அழைக்கும் குரல் கேட்கவும் தன்னிலை உணர்ந்தவள் அங்கிருந்த துவாலையால் துடைத்து கொண்டு வெளியே வந்தாள். "என்னக்கா இவ்ளோ நேரமா குளிக்கிற? ஏன் டிரஸ் எல்லாம் ஈரமா இருக்கு. " உமாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை பவித்ராவால். "நீ தூங்கு உமா. நான் டிரஸ் மாத்திட்டு வரேன்" நடுங்கும் குரலில் சொன்னவள் உடல் மாற்றி கொண்டு வந்து உமாவின் அருகே படுத்தாள். அதற்குள் உமா உறங்கி போயிருந்தாள். பவித்ராவுக்கு உறக்கம் வராமல் தவித்தாள். கும்மிருட்டு, தூரத்தில் நாய்கள் ஊளையிடும் சத்தம், காலில் கல்லும் முள்ளும் குத்த ஓடுகிறாள் பவித்ரா. "நில்லுடி நில்லு" அவளை யாரோ பின்னால் துரத்துவதை போல இருந்தது. திரும்பி பார்க்காமல் முடிந்தவரை வேகமெடுத்து ஓடுகிறாள். அவள் கட்டியிருந்த பாவாடை இடறி கீழே விழ அவளை துரத்தும் காலடி சத்தம் இப்போது அருகே கேட்க, "ஐயோ எனக்கு பயமா இருக்கு. அம்மா அம்மா" கத்தினாள் பவித்ரா. "பவி பவி இங்க பாரு பயப்படாத" லட்சுமி பவித்ராவின் கன்னங்களை தட்டி கொடுத்தார். பவித்ராவின் சத்தத்தில் பயந்து போன உமா ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றிருந்தாள். "சத்யா சீக்கிரம் டாக்டர்க்கு போன் பண்ணு. உடம்பு அனலா கொதிக்குது..."கண்களை திறக்காமல் "அம்மா அம்மா" என அரற்றும் பவித்ராவை கண்டவனது நெஞ்சம் விம்மி புடைக்க, வேகமாக தன்னுடைய கைப்பேசியை எடுத்து மருத்துவரை அழைத்தான். "பீவர் கொஞ்சம் அதிகமா இருக்கு. இன்ஜெக்ஷன் போட்ருக்கேன். நல்லா தூங்கட்டும். காய்ச்சல்ல தான் ஏதோ உளறிருக்காங்க. கொஞ்சம் வீக்க்கா இருக்காங்க. எழுந்ததும் கஞ்சி, சூப் அந்த மாதிரி ஏதாவது கொடுங்க. திரும்ப நான் ஈவினிங் வரேன். இந்த மெடிசின்ஸ்
tam
உலக அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு..!! நெருக்கடியான நேரத்தில் இப்படியா..!! ஆனாலும் தற்போது தங்களிடம் உள்ள மீதமுள்ள தொழிலாளர்களை வைத்து தேவையில் பாதியளவாகிலும் உற்பத்தி செய்ய போராடுவோம் என ஜம்ப்ஸ்டார்ட் தொழிற்சாலை தெரிவித்துள்ளது . கொரோனா வைரஸ் எதிரொலியாக உலகம் முழுவதும் வணிக வளாகங்கள் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் , ஆணுறை உற்பத்தி முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால் அதன் பற்றாக்குறை பெருமளவில் அதிகரித்துள்ளது. உலகளவில் ஆணுறை உற்பத்தியில் முன்னணியில் இருந்து வரும் மலேசியா உலக அளவில் உற்பத்தியாகும் ஆணுறைகளில் பாதி அளிவிற்கு உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மலேசியாவில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் , கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆணுறை உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது . அதாவது மலேசியாவில் உற்பத்தியாகும் கரேக்ஸ் பி.டி , டூரெக்ஸ் போன்ற பிராண்டுகள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகிறது . இவைகள் பிரிட்டனிலுள்ள என்.எச்.எஸ் என்ற மாநில சுகாதார அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது . அதுமட்டுமல்லாமல் ஐநா மக்கள் தொகை நிதி போன்ற திட்டங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது . இந்நிலையில் ஆணுறை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உற்பத்தி முற்றிலுமாக தடைபட்டுள்ளது . இதனால் உலகளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதை உணர்ந்த மலேசிய அரசு தங்கள் நாட்டு நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது, ஆனாலும் அதன் தொழிலாளர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா சிறப்பு விடுப்பில் இருப்பதால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . ஆனாலும் தற்போது தங்களிடம் உள்ள மீதமுள்ள தொழிலாளர்களை வைத்து தேவையில் பாதியளவாகிலும் உற்பத்தி செய்ய போராடுவோம் என ஜம்ப்ஸ்டார்ட் தொழிற்சாலை தெரிவித்துள்ளது . இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி , கோ மியா கியாட் , உலகளவில் ஆணுறை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது அறிந்திருக்கிறோம் , இது மிகுந்த கவலையளிக்கிறது , இது ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு வாரங்கள் மட்டுமின்றி அடுத்த ஒரு மாதம் வரையில் இந்தப் பற்றாக்குறை நீடிக்கும் . ஆணுறையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மற்றும் முக்கிய நாடுகளான சீனா கொரோனா பாதிப்பால் முடங்கியுள்ளது. அதேநேரத்தில் இந்தியா , தாய்லாந்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் ஆணுறைகளுக்கு மாற்றங்கள் மருத்துவ கையுறைகள் போன்ற பல முக்கிய பொருட்கள் தயாரிப்பதில் மலேசியாவில் மற்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது . சர்வதேச அளவில் பரவலாக முழுஅடைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில ஆணுறைகளில் தேவை அதிகரித்துள்ளது இதை சீர்செய்ய இன்னும் சில மாதங்கள் ஆகும் என கோ மியா கியாட் தெரிவித்துள்ளார் .
tam
சாக்ஷி அகர்வால்.. நடிகை,மாடல் என வலம் வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். விஸ்வாசம், காலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். ஆனால், இன்ஸ்டாகிராம் மாடலாகவே இவர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து, புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடினார். இதன் விளைவாக ஆர்யா நடித்த டெடி படத்தில் ஒரு சிறிய வேடம் கிடைத்தது. சுந்தர்.சி இயக்கிய அரண்மனை3 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் மூலம் தனி ரசிக கூட்டத்தையே உருவாக்கியுள்ளார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் உடல் அழகை காண்பித்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். View this post on Instagram
tam
கொச்சின் : ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ரிலீஸானது. இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் இயக்கியிருந்தார். மோகன்லாலும் இவரும் பல வருடங்கள் கழித்து இணைந்த படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை லால் ஜோஸ் ஈடுகட்டத் தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையில் அந்தப்படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு கேரளாவையும் தாண்டி மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. பாடலுக்காகவே ரசிகர் கூட்டம் : 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்காகவே ரசிகர்கள் கூட்டம் மீண்டும் தியேட்டருக்கு வருவதும் வருத்தத்தில் இருந்த இயக்குனர் லால் ஜோஸை உற்சாகப்படுத்தியுள்ளதாம். இந்தப்படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல், கடந்த வாரம் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பிடித்தது. வைரல் ஹிட் : கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து இந்தப் பாடலுக்கு நடனமாடி பதிவேற்றிய வீடியோ சமூக வலைதளங்களைத் தெறிக்கவிட்டது. அவர்கள் வெளியிட்ட வீடியோவே பத்து மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதுபோக, பல யூ-ட்யூப் சேனல்களும் இந்த வீடியோவைப் பதிவேற்றியிருந்தன. ஷெரில் ஆர்மி : இந்தப் பாடலில் முன்வரிசையில் நடனம் ஆடிய ஆசிரியை ஷெரில், தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டார். அவருக்கும் நம் தமிழ் ரசிகர்கள் ரசிகர் படையை உருவாக்கிவிட்டனர். ஷெரிலுக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படத்தில் இந்தப் பாடல் : இந்தப்பாடல் கல்லூரி மாணவர்கள் ஆடிப்பாடி மகிழ்வது போல படமாக்கப்பட்டிருந்தது. மோகன்லால் படத்தில் என்ட்ரி ஆவதற்கு முன்பே இந்தப்பாடல் படத்தில் வந்துவிடும். மோகன்லால் என்ட்ரியை எதிர்பார்த்து படம் பார்க்கும் ரசிகர்களை அப்போது இந்தப்பாடல் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், படம்விட்டு வெளியே வந்ததும் மனதில் அடிக்கடி நினைத்து முணுமுணுக்கும் பாடலாக அமைந்து விட்டது ஆச்சர்யம்தான்.
tam
நிறுவனம் பதிவு செய்தது வூக்ஸி டெக்ஃப்ரீ இன்டர்நேஷனல் ஷாங்காய்க்கு மிக நெருக்கமான சீனாவின் கிழக்கே வூக்ஸியில் அமைந்துள்ளது. நாங்கள் வெப்பப் பரிமாற்றி தீர்வுகள் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் மற்றும் தொழில்துறை உபகரணங்களுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும் மஃப்ளர் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற ஒரு சிறப்பு சப்ளையர் .நாம் 2009 இல் நிறுவப்பட்டது, அன்றிலிருந்து உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவையை வழங்குகிறோம். எங்கள் அனுபவம் மற்றும் அறிவு பின்னணியுடன் வாடிக்கையாளரின் யோசனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து எங்களுக்கு நல்ல புரிதல்கள் உள்ளன. எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, இந்தியா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், கொரியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன, உலகெங்கிலும் உள்ள நம்பிக்கையை வென்றன, இந்த நம்பிக்கை நம்மை தொடர்ந்து நகர்த்தி வருகிறது. எங்கள் குளிரூட்டிகள் மற்றும் ரேடியேட்டர்கள் அல்லது மஃப்லர்களுடன் அதிகமான இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எங்கள் பயன்பாடு மருத்துவ மற்றும் குளிர்பதன வாகனத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது, செயல்திறன் மற்றும் மதிப்பை மேம்படுத்த புதிய தொழில்நுட்பத்தில் நாங்கள் பணியாற்றுகிறோம். எங்கள் ஆர் அன்ட் டி உறுப்பினர்கள் ஆண்டு சேவையில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். எங்கள் தொழிற்சாலை தை ஏரிக்கு அருகில் உள்ளது, மொத்த திறமையான 55 தொழிலாளர்கள், எங்களிடம் பிரேசிங் உலை, துடுப்பு இயந்திரம், லேசர் வெட்டும் இயந்திரம், தானியங்கி வளைக்கும் இயந்திரம் போன்ற வசதிகள் உள்ளன. ISO9001 அமைப்பை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி. காற்று அல்லது கடலுக்கான போக்குவரத்து வலைகள் மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்து கடந்த சில ஆண்டுகளில், "நேர்மையான மற்றும் நம்பகமான, வாடிக்கையாளர் முதலில்" என்ற கொள்கையுடன், வாடிக்கையாளர்களைக் கவர வாடிக்கையாளர் முதல், நேர்மையான சேவை என்ற கொள்கையை நாங்கள் எப்போதும் கடைப்பிடித்து வருகிறோம், மேலும் தயாரிப்புகளின் அடிப்படையில், எங்கள் தரநிலையாக "தரம் சார்ந்த, சிறப்பானது" எடுத்துள்ளோம், வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தர உயர்தர சேவைகளை வழங்க முயற்சிக்கிறோம், அதே நேரத்தில், நாங்கள் நீண்ட காலமாக நிறுவனத்தை உருவாக்கச் செய்துள்ளோம் நாங்கள் எங்கள் துறைகளில் மேலும் பலவற்றைச் செய்வோம், எதிர்காலத்தில் உங்கள் விசாரணைகள் மற்றும் கேள்விகளைப் பெற நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
tam
கச்சிதமான கதை. எங்கோ ஒரு மலையடிவாரத்தில் வைரங்கள் இருக்கின்றன. தற்செயலாக தெரிந்து கொள்ளும் ஒரு பணக்கார சேட்டுப் பையன் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறான். இதில் ஒரு கிளீனர் சிறுவன், ஒரு ஊமைச் சிறுமி என்று பாத்திரங்கள். கிளீனராக வரும் சிறுவன் கலக்கலான பாத்திரப் படைப்பு. சுஜாதாவுக்கு எப்போதும் இந்த மாதிரி உழைக்கும் வர்க்க சிறுவர்களை படைப்பது பைன் ஹாத் கா கேல். அவர்கள் மேல் அழுத்தும் வறுமையும், அதே நேரத்தில் அந்த வயதுக்கே உரிய ததும்பி நிற்கும் உற்சாகமும் நன்றாக சித்தரிப்பார். அவன் ஊமைச்சிறுமியுடன் விளையாடுவதும், அக்காவை காப்பாற்றுவதும் எல்லாமே நன்றாக வந்திருக்கும். சேட்டு பையனின் பணத்திமிர், ஜியாலஜி ஃப்ரொஃபசரின் ஜம்பம், டீக்கடைக்காரனின் தோற்கப்போகும் தன்னம்பிக்கை என்று ஒரு கை தேர்ந்த ஓவியனின் லாகவத்தோடு ஓரிரண்டு வரிகளில் ஒரு நல்ல சித்திரத்தை நமக்கு காட்டுகிறார். சுஜாதாவின் பலங்களில் ஒன்று அவர் உபதேசங்களை கவனமாகத் தவிர்ப்பது. இதெல்லாம் ஒரு பலமா, எந்த நல்ல எழுத்தாளனும் உபதேசம் செய்வதில்லையே, அசோகமித்திரன் உபதேசம் செய்வாரா என்ன என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் நா.பா., அகிலன் மாதிரி எழுத்தாளர்களைப் படித்ததில்லை என்று பொருள். அப்படி கதைகளை வாரப் பத்திரிகைகளில் படித்து வளர்ந்த ஒரு கூட்டத்துக்கு சுஜாதா ஒரு revelation என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு சமூக அவலத்தை, அறச்சீற்றம் உருவாக்கும் ஒரு நிகழ்ச்சியை, வெகு கவனமாக ஃபோட்டோ பிடிப்பது போல எடுத்துக் காட்டுவார். அறச்சீற்றம் என்பது அவர் எழுத்தில் இருக்கவே இருக்காது. இந்தப் புத்தகமும் அப்படித்தான். நகரம், ஒரு லட்சம் புத்தகங்கள், ஜன்னல் மலர், குருபிரசாதின் கடைசி தினம், ஒரு மெக்கானிக் செட்டில் இரு சிறுவர்கள் ஒரு நடிகையின் மகளுக்கு நண்பர்களாவது (கதை பேர் நினைவு வரவில்லை) என்று பல புனைவுகளை சொல்லலாம். சுஜாதாவின் சிறந்த புனைவுகளில் ஒன்று. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்
tam
டீம் B புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்துள்ள சஸ்பென்ஸ், திரில்லர் பாணி திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. படத்தில் நாயகனாக நகுல் நடிக்கிறார். ரேணு சௌந்தர் நாயகியாக நடிக்கிறார். இவர் கேரளத்து வரவு. எதிர்பாராத ஒரு கதாப்பாத்திரத்தில் இலங்கையை சேர்ந்த ஒரு நடிகர் நடிக்கிறார். மேலும் சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பி.கே.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ‘D-3’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே ‘உடன்பால்’ படத்திற்கு இசையமைத்தவர். ராஜா ஆறுமுகம் படத் தொகுப்பு செய்கிறார். இவர் ‘D3’, ‘லேபில்’ படங்களில் பணியாற்றியவர். பாலாஜி படத்தை எழுதி, இயக்குகிறார். ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் கொலை நடக்கிறது. கொலைகளுக்கிடையே உள்ள தொடர்ச்சியை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஊரில் யாராவது அது பற்றிப் பேசும்போது, மற்றவர்கள் அதை ஒரு கதை போல எண்ணி நம்பாமல் கடந்து போகிறார்கள். அப்படி ஒரு கொலை நடக்கும்போது அங்கே இளம்பாரி என்கிற இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார். அவர் அந்தக் கொலைக்கான பின்னணியை ஆராய்கிறார். அதன் பின்னே ஒளிந்துள்ள மர்மங்களைத் தேடிப் பிடித்து ஆராய்கிறார். கொலைகளில் ஒளிந்துள்ள இருளைக் கண்டு அஞ்சாமல் புலனாய்வு என்கிற விளக்கைக் கொண்டு தீவிரமாகத் தேடுகிறார். பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. இப்படி ஒரு சஸ்பென்ஸ், த்ரில்லராகச் செல்கிற கதைதான் இந்த ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம். இப்படி பல்வேறு திறமையான இளைஞர்கள் இணைந்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இப்படிப்பட்ட கதைகள் மொழி எல்லையைக் கடந்தவை என்பதால் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது. இந்த ‘தி டார்க் ஹெவன்’ சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நடிகர்கள் சசிகுமார், பரத், சிபிராஜ் மூவரும் வெளியிட்டுள்ளனர். இந்த டைட்டில் லுக் தமிழ் ரசிகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.
tam
கடந்த வாரம், போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வருகை தந்தனர். சிவானி நாராயணனின் அம்மா, அவருடன் இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்கு முன்பு, பாலாஜியை நாய்க்குட்டியைப் போல பின்தொடர்ந்ததற்காக அவளை திட்டினார். சிவானியின் தாயின் தீவிர எதிர்வினை சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பலர் இதை உணர்ச்சி மற்றும் பெற்றோரின் துஷ்பிரயோகம் என்று அழைத்தனர். கமல் பின்னர் ஆரியுடனான தனது பிரச்சினைகள் குறித்து பாலாஜியிடம் கேட்டார். கடந்த மூன்று சீசன்களில் பிக் பாஸை வென்றவர்கள் எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறிய பாலாஜியின் கருத்துக்களை புரவலன் நினைவு கூர்ந்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (04/01/2021) Promo 2 வீடியோ இதோ. கமல், “உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிக் பாஸை வெல்வதற்காக நீங்கள் விளையாடுகிறீர்கள். உங்கள் கருத்து நீங்கள் செல்ல விரும்பும் நிலையையும், உங்களுக்கு வாக்களித்த பார்வையாளர்களையும் மதிக்கிறது. உயரமாக இருப்பது அங்குலங்களில் இல்லை, ஆனால் நீங்கள் எப்படி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் பார்வையாளர்களை விட உயரமானவர் அல்ல. பாலாஜி, நீங்கள் மாறும்போதெல்லாம் நான் உங்களைப் பாராட்டினேன், ஆனால் இப்போது, நீங்கள் 10 படிகள் பின்னோக்கிச் சென்றிருக்கிறீர்கள். இப்போது, பாலாஜியின் உண்மையான முகம் எது என்று எனக்குத் தெரியவில்லை. ” Watch the promo video below. Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]
tam
கைது எச்சரிக்கையையும் மீறி அரசு ஊழியர் ஸ்டிரைக் தங்களுடைய பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். வேலைநிறுத்தம் செய்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்ற அரசின்எச்சரிக்கையைக் கண்டு பயப்படமாட்டோம் என்று அரசு ஊழியர் சங்கங்கள் கூறியுள்ளன. பறிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை மீண்டும் தரக்கோரி ஜூன் மாதம் 4ம் தேதி முதல்காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள் சங்கங்கள்அறிவித்துள்ளன. அதற்கு முன்பு அடையாள போராட்டமாக இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம்நடைபெற்றது. சென்னை-சேப்பாக்கம் அரசு அலுவலக வளாகம், டி.எம்.எஸ். வளாகம் ஆகியஇடங்களில் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது. வெறிச்சோடிய கோட்டை: இந்நிலையில் ஸ்டிரைக் காரணமாக தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசுஅலுவலகங்களிலும் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. சுமார் 7,095 ஊழியர்கள் பணிபுரியும் தலைமைச் செயலகத்தில் 300 ஊழியர்கள் மட்டுமே பணிக்குவந்திருந்தனர். முக்கிய அதிகாரிகளும் ஊழியர்களும் பணிக்கு வரவில்லை. முக்கிய துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். சில அமைச்சர்களின் அரசு டிரைவர்களும் கூட ஸ்டிரைக்கில்ஈடுபட்டுள்ளதால் மாற்று டிரைவர்கள் உதவியுடன் காரில் அவர்கள் கோட்டைக்கு வந்தனர். முதல்வர் ஜெயலலிதா செல்லும் லிப்டைத் தவிர மற்ற அனைத்து லிப்டுகளும் ஊழியர்கள்இல்லாததால் இயங்கவில்லை. கேன்டீனும் இழுத்து மூடப்பட்டிருந்தது. "அரசே காரணம்": இந்தப் போராட்டத்திற்கு அரசுதான் காரணம் என்றும் அரசே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்என்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் குற்றம் சாட்டினர். தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்துஉண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஊழியர்கள் வராத காரணத்தால் கலெக்டர் அலுவலகங்கள்எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. முன்னதாக, போராட்டம் தொடர்பான விளக்கக் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அரசின்தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அங்குகூடியிருந்தனர். அவர்களிடம் பேசிய தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் பாண்டுரங்கன்கூறுகையில், எஸ்மா சட்டத்தை ஏவினாலும் அதைவிட கொடுமையான சட்டத்தை ஏவினாலும்நாங்கள் பயப்படப் போவதில்லை. போராடிப் பெற்ற சலுகைகளை மீண்டும் பெறும் வரை நாங்கள்ஓயவும் மாட்டோம் என்றார். வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் அதே நேரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் அரசுஊழியர்கள் நடத்துகிறார்கள். கடந்த முறை நடந்த அரசு ஊழியர் போராட்டம் தோல்வியடைந்தது. அதற்குக் காரணம், முக்கியமான சங்கங்களில் ஒன்றான தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றியத்தின்தலைவர் சூரியமூர்த்தி திடீரென்று போராட்டத்தை வாபஸ் பெற்று காலை வாரிவிட்டததுதான்.ஆனால் இந்த முறை அவரது சங்கமும் போராட்டத்தில் குதித்துள்ளதால் வேலைநிறுத்தம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 9.50 மணிக்குள் அலுவலகத்தில் ஆஜராகாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.
tam
புரோ கபடி போட்டி 7வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அகமதாபாத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 34 – 28 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது. பரபரப்பாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி, புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 32-30 என்ற புள்ளிக் கணக்கில் புனே அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
tam
யாழ்.அரியாலை பகுதியில் மணல் கடத்தல் கும்பலை தடுக்க சென்றிருந்தவர்களை தடுக்க சென்றிருந்த விசேட அதிரடிப்படையினர் மீது மணல் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் 4 அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மண் அகழப்படுவதாக தகவலறிந்த நிலையில்,சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர். இதன்போது கள்ள மண் கள்ளர்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.இதில் 4 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
tam
யார் தலைவர்? யாது தலைமைப் பண்பு? அமைச்சர் என்பவர் நாட்டை ஆளும் அரசருக்கு ஆலோசனை கூறி, நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும் வகையில் அவருடைய எண்ணங்களையும் திட்டங்களையும் செயல் படுத்தும் நிலையில் உள்ளவர். இன்றைய குழும உலகில் குழுமங்களின் செயலர்கள் அல்லது முதன்மைச் செயலர்கள் அல்லது தலைவர்கள், குழுமத்தின் உறுப்பினர்களுக்கும் அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பயன்தரத்தக்க வகையில் குழுமங்களின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டுக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து, அவற்றைச் செயல்படுத்தும் நிலையில் உள்ளனர். அவ்வாறு அவர்கள் செயலாற்றும் பொழுது அவர்களது செயல்கள் சிறப்பாக அமைந்திடவும், குழுமத்தின் நோக்கங்கள் எளிதில் நிறைவேறிடவும் பல்வேறு உத்திகளையும் நுட்பங்களையும் கடைபிடிக்க வேண்டியவராய் இருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நுட்பங்களும் உத்திகளும் அவர்கள் பெற்றிருக்க வேண்டிய தலைமை அல்லது மேலாண்மைப் பண்புகளெனப் போற்றப்படுகின்றன. பொய்யாமொழிப் புலவர் வாழ்ந்த காலம் குழுமங்களில்லா மன்னர்கள் கோலோச்சும் காலமாக இருந்தபடியாலும், அம்மன்னர்களுக்கு ஆலோசனைகளைக் கூறி, கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பில் அமைச்சர்கள் இருந்தபடியாலும் அவ்வமைச்சர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளை அமைச்சு என்னும் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். அவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஒரு முதன்மைச் செயலர் (chief Executive) பெற்றிருக்க வேண்டிய பண்புகள் அல்லது குண நலன்கள் எனக் கொள்வோமேயானால் குழும ஆளுகை (Corporate Governance or Corporate management) கோலோச்சும் இக்காலகட்டத்திற்கும் அவை பொருந்துவதைக் காணலாம். மன்னர், வேந்தர், சான்றோன் எனப் பலவாறாலும் சுட்டப்பட்டு சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அத்துணையும் மேலாளர், செயல் அலுவலர் அல்லது தலைவர் என ஒரே நிலையில் வைத்துப் பொருள் கொள்ளப்பட்டுள்ளன. தற்காலத்தில் அரசு, குழுமம் ஆகியவற்றினை இயக்கிடுவோர், அரசருக்கு நிகராக அல்லது ஒரு தலைவர் என எடுத்துக்கொள்வது தவறாகாது. எனவே, தலைவர் அல்லது மேலாளர் அல்லது செயல் அலுவலர் எனப்பொருள் கொள்ளும் வகையில் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. செயல்திறன் (Executive Skill) ஓரு நல்ல மேலாண்மையின் பெருமை அது. மேற்கொள்ள வேண்டிய சீரிய செயல்களையும், அவற்றினைச் செய்யும் முறைகளையும், அவற்றிற்கான காலத்தினையும், கையாள வேண்டிய கருவிகளையும் (மனித, மற்றும் பொருள் வளங்கள்) ஆய்ந்து (தேர்ந்து திரட்டி) மேற்கொள்ளுதலில் அடங்கும். எனவே, ஒரு சிறந்த மேலாளர் இப்பண்புகளைப் பெற்றிருக்க வேண்டுமென்பது வள்ளுவர் வகுக்கும் நெறியாகும். கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு – 631 கருவி – வளங்கள் (மனித வளம் மற்றும் பொருள் வளம்) காலம் – உரிய காலமும் சூழலும் செய்கையும் – செய்யக்கூடிய செயல் குறித்த தெளிவு செய்யும் அருவினை – செய்தலுக்கான நுட்பங்கள் மாண்டது – பெருமையுடையது, மகிமையுடையது, பண்புகளைக் கொண்டது அமைச்சு – தலைமைப் பண்பு சமூக அக்கறையும் சிறந்த நூலறிவும் (Knowledge and Concern for the Society) ஒரு சிறந்த மேலாளரின் பெருமை ஒரு செயலினை அல்லது திட்டத்தினை நிறைவேற்றும் பொழுது அது குறித்த திட மனமும், சமூகநல நோக்கும், செய்ய வேண்டுவது மற்றும் தவிர்க்க வேண்டியது பற்றிய தெளிவான சிந்தனைகளுடன் மேலாண்மைக் கூறுகளான தேவையான பொருள் வளம், உரிய மனித வளம், சரியான காலம், செய்யும் முறை, செய்யவேண்டிய செயல், (631ஆம் குறளில் கூறப்பட்ட குணநலன்கள்) ஆகிய அனைத்தினையும் கருத்தினில் கொண்டு செயல்படுவதில் அடங்கும். வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு – 632 வன்கண் – மன உறுதி திட மனது குடிகாத்தல் – சமூநலன் பேணுதல் கற்றறிதல் – செய்யத்தக்கன, செய்யத்தகாதன குறித்த கல்வியறிவு ஆள்வினையோடைந்து – ஆள்வினைக்குத் தேவையானவை எனக் கருதப்படும் ஐந்து குணநலன்கள் (தேவையான பொருள் வளம், உரிய மனித வளம், சரியான காலம், செய்யும் முறை செய்ய வேண்டிய செயல் செயலாக்கும் முறைகள் (Procedure for or method of execution) செய்தற்குரிய செயலினை அவற்றின் தன்மை கருதிப் பல கூறுகளாகப் பிரித்தலும் (Job analysis), அவ்வாறு பிரிக்கப்பட்ட வினைகளை அவற்றின் ஒத்த தன்மை அடிப்படையில் ஒரு துறையின் கீழ்க் கொண்டு வந்து (Departmentation) வளப்படுத்துதலும் பின்னர் அப்பணியினைச் சிறப்பாய் முடித்தல் கருதி அத்துறைகள் நிறைவேற்றிய வினைகளை ஒருங்கிணைத்து (Co-ordination) முழுமையான பணியாகச் செய்து முடித்தலே திறமையான மேலாண்மையாகும். பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு – 633 பிரித்தல் – நிறைவேற்றத் தக்க வகையில் ஒரு பணியினைப் பல் பல கூறுகளாகப் பிரித்தல் பேணிக்கொளல் – அவ்வினைகளை வளப்படுத்தித் தொகுத்து (Grouping) துறைவாறாக ஒதுக்குதல் பிரித்தார் பொருத்தல் – பல துறைகளும் செய்தனவற்றை (செயல்களை) ஒருங்கிணைத்தல் வல்லது – வலிமை அல்லது திறமை பெற்றது முடிவெடுத்தலும் ஒத்த கருத்தினை உருவாக்குதலும் (Decision making and Group consensus) ஒரு செயலினை நிறைவேற்றும் பொழுது பல்வேறு மாற்று முறைகளை ஆய்ந்து, அவற்றுள் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து, அதனை முடித்தற்கு உறுப்பினர்களிடையே ஒருமித்த ஆற்றல் தோன்றும் வண்ணம் கற்பித்து, விளக்கி, செயலினில் இறக்குவது ஒரு சிறந்த மேலாளரின் பண்பாகும். தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு – 634 தெரிதல் – ஒரு வினையினை மேற்கொள்ளுதற்கான பல்வேறு மாற்று வழிகளை ஆய்வு செயதல் தேர்ந்து – அவற்றுள் சிறந்த அல்லது உகந்த ஒன்றினை தேர்ந்தெடுத்து செயலும் – முடிவு செய்தலும் ஒருதலையாச் சொல்லலும் – ஒத்த கருத்து ஏற்படுத்தும் வண்ணம் விளக்கிச் சொல்லி ஏற்கச் செய்தலும் வல்லது – திறமை பெற்றது தகுதியானவரைத் துணையாகக் கொளல் (Selection of aides) ஒரு மேலாண்மைக்கு, ஒரு திட்டத்தினை நிறைவேற்றத் துணை நிற்பவராய் தேர்ந்தெடுக்கப்படுபவர் வினை நுணுக்கங்களையும், செய்தற்குரிய விதிமுறைகளையும் (நியாய தருமங்களை) நன்கு அறிந்தவராயும், அவற்றின் பொருளினை (சக பணியாளர்களின் ஒத்துழைப்பினைப் பெறல் வேண்டி) சரியாக எடுத்தியம்ப வல்லவனாயும், எச்சூழலையும் (தோன்றக்கூடிய எதிர்ப்புகளை சமாளிக்கும்) எதிர்கொள்ளும் திறமை வாய்ந்தவராயும் இருத்தல் வேண்டும். அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை -635 அறனறிந்து – செயலினை நிறைவேற்றுதற்கான நேர்மையான செயல் முறைகளை அறிந்து ஆன்றமைந்த – பெருமை பொருந்திய சொல்லான் – திறமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லும் திறமை பெற்றவன் எஞ்ஞான்றும் – (ஏற்றல், இகழ்தல், எதிர்த்தல் ஆகிய) எக்கால கட்டத்திலும் திறனறிந்தான் – தத்துவங்களை அறிந்தவன் (knowledged about principles) தேர்ச்சி – பணிக்குத் தேர்ந்தெடுத்தல் துணை – துணையாக நிற்பவர் ஓரு பணி அல்லது செயலை நிறைவேற்றுதற்கு அன்பு, அறிவு தெளிந்த சிந்தனை, சுய விருப்பமின்மை ஆகிய நான்கு குணாதிசயங்களையும் பெற்றிருக்கக் கூடியவரைத் தேர்வு செய்தல் சிறப்புடையதாகும். அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு நன்குடையான் கட்டே தெளிவு – 513 தேற்றம் – தெளிந்த சிந்தனை அவாவின்மை – ஆசைகொள்ளாதிருத்தல் சுயவிருப்பமின்மை தெளிவு – தேர்ச்சி செய்தல் நான்குடையான் கட்டே – நான்கு குண நலன்களையும் பெற்றிருப்பவரையே பாகுபாடின்றி (பேதம் காட்டாது) செயலாற்றல் (Unbiased behaviour) ஓரு செயலினைப் போதிய தெளிவுடன் வினையாற்றும் எந்த நபர் மீதம் பேதம் காட்டாது சரியான வழிகாட்டலுடன் சரியான நபரை ஆய்ந்து தேர்ந்து ஒப்படைத்தலே உரிய முறையாகும். ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார் மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை. – 541 ஓர்ந்து – ஆய்ந்து கண்ணோடாது – பேதம் காட்டாது இறைபுரிந்து – சரியான வழி காட்டலுடன் யார்மாட்டும் – எவர்பாலும் தேர்ந்து – உரிய நபரைத் தேர்ந்து, தெரிவு செய்து ஒரு தலைவனுக்கு அவன் அப்பொறுப்பிலிருக்கும் காலம் முழுமையும் ஏற்றத் தாழ்விலா சீரான நிலைப்பாட்டினை அளிக்க வல்லதான, மனத்தளவிலும் கூட யார் எப்பக்கமும் சாயாதிருக்கும் பண்பு சிறந்த அணிகலனாகக் கருதப்படும். கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி 115 கேடு – தாழ்ச்சியுறல் பெருக்கம் – மேன்மையடைதல் நெஞ்சத்துக் கோடாமை – மனத்தளவிலும் வளையாமை சான்றோர் – சிறந்த நிலையில் இருப்போர் தலைமை பொறுப்பிலிருப்போர் அணி – அணிகலனாகும் நடுநிலை தவறாமை, நிதானந்தவறாதிருத்தல் (Balanced) ஒரு வினையின் சாதக பாதகங்களாகிய இரு பக்கத்தினையும் சீர்தூக்கிப் பார்த்து ஒரு துலாக்கோல் போன்று எப்பக்கமும் சாயாது நடுநிலையாயிருத்தல் ஒரு தலைவனுக்கு (அணிகலனாகும்) உரிய பண்பாகும். சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. 118 சமன் செய்து – சமப்படுத்தி, சமநிலை காட்டி சீர்தூக்கும் – சீரான அளவினை நிலைப்படுத்தும் கோல் போல் – துலாக்கோல் தராசு போல் ஓழுக்கந் தவறாமை (Discipline) ஓழுக்கந்தவறுதலின் கேடுகளை (அது எந்த அளவுக்கு கீழான நிலைக்குத் தள்ளிவிடும் என்பதனை) நன்கறிந்த காரணத்தால் ஒழுக்கத்தினைக் கடைபிடித்தலில் (ஒழுக்கத்தினின்று விலகிச் செல்லாத) திடமான மனத்தினைக் கொண்டவராயிருப்பர். ஓழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து 136 உயரிய குறிக்கோள்களைக் கொண்டிருத்தல் (Achievement Orientation) ஒரு (நிறுவனத்தின்) உயரிய குறிக்கோளினை அடைதற்கெனப் பாடுபடும் (நிறுவன) உறுப்பினர்கள் (குடிமக்கள்) அந்நிறுவனத் தலைவனின் செவ்விய செயல்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படுவர். வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி – 542 வான் – (வானத்தைப்போன்று) உயரிய குறிக்கோள்கள் நோக்கி – அடைந்திடும் நோக்கத்துடன் வாழும் – செயல்பட்டுவரும் உலகெல்லாம் – மக்கள் எல்லோரும் (உறுப்பினர்கள் அனைவரும்) மன்னவன் – தவைனின் கோல் நோக்கி – செம்மையான செயல்பாடுகளைச் சார்ந்து வாழும் குடி – செயல்படக் கூடிய மக்களாவர் தலைவருள் ஒளிவிளக்கு முன்மாதிரி (Role Model) கொடைத்தன்மை (கருணை நோக்கு), மக்களைக் கனிவோடு நோக்கிடும் பண்பு, பணியாளர் நலன் பாராட்டும் பாங்கு, செம்மையான செயல்பாடு ஆகிய குணநலனன்கள் தலைமைப் பண்பிற்கு ஒளிவிளக்காகக் கருதப்படும் பண்புகளாகும். கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி – 390 கொடை அளி – மிகுதியான கருணையும் செங்கோல் – செம்மையான ஆளுமை குடி ஓம்பல் – மக்கள் பணியாளர்கள் நலன் காத்தல் வினையினை ஏற்பதற்குத் தகுதிப் படுத்திக்கொளல் (Equipping) ஒருவர் தலைமைப் பண்பினை ஏற்றற்கு அல்லது பணியினை மேற்கொள்ளுதற்கு முன்னதாகப் பெற்றிருக்க வேண்டிய குணநலன்கள் அல்லது தகுதியாவது செறிந்த அறிவு, சிறந்த கல்வி, உகந்த தோற்றப்பொலிவு ஆகியனவற்றை நிரம்பப் பெற்றிருத்தலாகும். ஆறிவுரு வாராய்ந்த கல்வி இம்மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு – 684 அறிவு – கல்வி அறிவு உரு – தோற்றப்பொலிவு (personality) ஆராய்ந்து – தேடல் ஆர்வம் செறிவுடையான் – நிரம்பப்பெற்றவன் உறுதியான உடனடிச் செயல்பாடு (Firm and Immediate action) முடிவு செய்து செய்யவிருக்கும் ஒரு பணியினை மேற்கொள்ளும் போது திடமனதுடனும் சோம்பல் கொள்ளாது காலதாமதமின்றி உடனடியாகச் செய்திடல் வேண்டும் கலங்காது கண்டவினைக்கட் டுளங்காது தூக்கம் கடிந்து செயல் – 668 கலங்காது – கலக்கமில்லாது கண்டவினை – தீர்மானிக்கப்பட்ட செயல் துளங்காது – சோம்பலின்றி தூக்கம் கடிந்து – கால தாமதத்தைத் தவிர்த்து விரைந்து ஆகவே செயலாற்றும் திறன் (executive skill) சமூக அக்கறை (concern for the society), சிறந்த நூலறிவு (sound knowledge), செயல்முறை பற்றிய ஞானம் (Knowledge about procedures), முடிவெடுக்கும் திறன் (decision making skill), ஒத்த கருத்தினை உருவாக்கும் பண்பு (ability to create consensus), தகுதியுடையோரை துணை கொள்ளும் (selecting eligible trust worthy people as aides) பண்பு, பேதம் காட்டாது செயலாற்றல் (unbiased / Balanced behaviour), நடுநிலை தவறாமை (Judgment), ஒழுக்கந்தவறாமை (Discipline), உயரிய குறிக்கோலினை கொண்டிருத்தலும் (Achievement orientation) அதை அடைய பயணித்தலும் (striving to achieve the goal), தொண்டர்களுக்கு முன்மாதிரியாய் (Role model) இருத்தல் மற்றும் உறுதியான உடனடி செயல்பாடு (Firm and immediate action) ஆகிய நற்பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வலியுறுத்தும் தலைமைப் பண்புகளாகும். “
tam
|Content (உள்ளடக்கம்): தமிழ்மொழி மீது தீராத அன்பு கொண்டிருந்த நான் நேரடியாக தமிழ் பணியில் 2005ம் ஆண்டு தமிழ் புத்தக வெளியீடு, விற்பனை, மீள்பதிவுடன் ஆரம்பித்தேன். யாழ்ப்பாண அகராதி மீள்பதிவு நடைபெற்றபோது எனது பங்களிப்பு மிகவும் சிறியதாகவே அமைந்தது. தமிழ்நாட்டில் பிறந்த தமிழ்மண் பதிப்பக நிறுவனத்திரும், எனது 25 வருட நண்பருமான அண்ணன் கோ.இளவளகனா உழைப்பே மிகவும் அதிகமாக இருந்தது. தமிழால் கொள்கையால் ஒன்றுபட்ட நாம் வாழ்வது மட்டும் வேறு நாடுகளில் இவ்வகராதியின் ஆரம்பம் எமது நாடு என்பது மட்டுமே பெருமை கொள்ள வேண்டிய விடயம். ஆனால் அதை நாம் கவனிக்காமலும் தெரியாமலும் இருந்துள்ளோம். அண்ணன் அவர்களின் பெரும் முயற்சியில் இதை தேடி எடுத்து மீண்டும் ஒவ்வொரு சொற்களாக அச்சு பதிவு செய்து சுமார் 1000 பக்கங்கள் அடங்கிய ஒரு பெரிய ஆவணமாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு படைத்துள்ளார். இந்த தமிழ் ஆவணத்தை எமது பார்வைக்கு தந்துதவியதற்காக அவரையும் அவரது குடும்பத்தாரையும் மணமார வாழ்த்தி எமது நன்றியை தெளியப்படுத்துகின்றோம். மேலும் எமது பார்வைக்குபடாமல் இருக்கும் அரிய பொக்கிஷங்களை, தேடி எடுத்து இம்மண்ணிற்கு தரவேண்டும் என்று எண்ணி, அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டும் என வேண்டுகின்றேன். இவ்வகராதியை பொறுத்தவரை மிகவும் சிறிய பங்களிப்பை செய்த என்னை பதிப்பாளர்களில் ஒருவராக உயர்த்தி உலக நாடுகள் முழுவதற்கும் விற்பனை உரிமையை எனக்கு தந்து 14ஃ05ஃ2005ஆம் ஆண்டு கொழும்பு தமிழ் சங்கத்தில் நடந்த பெரும் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி என்னை ஊக்குவித்த அண்ணன் கோ.இளவழகனார் அவரையும் அவர் தம் குடும்பத்தாரையும் வாழ்நாளில் நானும் எனது இல்லத்தாள் ஜெயராணி, குழந்தைகள் தர்ஷினி, சஞ்சயன், சஷிவர்ணன், அபிநந்தா ஆகியோர் இன்றைக்கும் ஏழேழு பிறப்பிற்கும் கட்ப்பாட்டுக்குரியவர்கள். 2008ம் ஆண்டு ஆவணி 24ம் திகதி எனது பிறந்த நாளில் 3ம் பதிப்பாக இவ்வகராதி மீண்டும் வெளிவருகிறது. 2008ம் ஆண்டு யாழ்ப்பாண அகராதி பதிப்பாளராக இனங்காணப்பட்ட நான் 2002ம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் நாளில் தனியாக நூல்களை பதிக்க ஆரம்பித்து பேராசிரியர் தகைகளை நண்பர் மதுசூதனன் அவர்களினூடாக அறிமுகமாகிக் கொண்டு இந்த எட்டுமாத காலத்தில் சுமார் இருபத்திமூன்று கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளேன். இதன் அத்தனை பெறுமைகளும் அண்ணன் இளவழகனாரையே சாரும். யாழ்ப்பாண அகராதி பெருமைப்பட்டதை விட நான் அதனால் பெருமைப்பட்டதும் பயனடைந்ததும் அதிகம் என்பதை இதில் கூறிக்கொள்கிறேன். நீண்ட அனுபவமுள்ள பதிப்பாளர்களுக்கிடையில் புதியவராக முன் அனுபவம் இன்றி இத்தொழிலுக்கு வந்த என்னை மிகவும் ஊக்கமளித்து உங்களால் முடியும் என பல தடவை கூறி தனது தொடர் நூல்களை எனக்குப் பதிப்பிக்க உரிமை தந்த எனது மதிப்புக்குரிய பேராசிரியர் சபா.ஜெயராசா நட்புக்குரிய பேராசிரியர் சந்திரசேகரன், கலாநிதி கருணாநிதி, அண்ணனும் ஓய்வு நிலை உதவி அரச அதிபருமாகிய க.ஐயம்பிள்ளை, பேராசிரியர் கிருஷ்ணராசா, பேராசிரியர் அன்டனி நோர்பேட், கலாநிதி திருமதி கிருஷ்ணவேணி, பேராசிரியர் சத்தியசீலன், பேராசிரியர் சு.வித்தியானந்தன், ஓய்வுநிலை அதிபர் திருமதி கோகிலா மகேந்திரன், ஒய்வுநிலை அதிபர் கனகசபாபதி, தையல் முத்து தனராஜ், க.சி.குணரட்ணம், திரு.ஆ.முத்து தம்பிப்பிள்ளை , திரு.ஆப்டீன், திரு.பொன்னுத்துரை இவர்கள் எல்லோரையும் இத்தருணத்தில் அன்புடன் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மிக குறுகிய காலத்தில் நாம் வெளியிட்ட நூல்களான கல்வி கோட்பாடுளும், மாற்றுச்சிந்தனைகளும் சமகால கல்வியில் சில பரிமாணங்கள், கற்றல் உளவியல், கல்வி சமூகவியல், கற்றல் கற்பித்தல் மேம்பாட்டுக்கான வழிமுறைகள், ஜோதியும் சுடரும், அழகியல், முகாமைத்துவ கோட்பாடுகள் ஒர் அறிமுகம், சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம், இலங்கையில் கல்வி வரலாறு, இலங்கை தமிழர் வரலாற்றில் சில பக்கங்கள், இலக்கியத் தென்றல், வளிமண்டலவியலும், காலநிலையிலும், உளவியல் முகங்கள், இலக்கியத் திறனாய்வு, திறவுகோள், தலைமைத்துவக் கோட்பாடுகள், நோத் முதல் கோபல்லவா வரை, மொழிக் காலனித்துவமுதம் பரதநாட்டியமும், நந்தியும் மலையகமும், யாழ்ப்பாண சரித்திரம், கல்வியியலும் கணிப்பீட்டியலும் போன்றவை விளங்குகின்றன. இவைகளுள் யாழ்ப்பாண அகராதியின் மூன்றாம் பதிப்பு எமது பதிப்பதற்கு கிடைத்த பெரும்பேறாகஎண்ணி எண்ணி மகிழ வைக்கிறது. அகராதி ஒரு பொக்கிஷமாக எமது பதிப்பகத்திற்கு கிடைத்ததை எண்ணி மிக |Full Description (முழுவிபரம்): மிக்க அரிதிற் கிடைப்பனவாகிய, அச்சுப்பதிவுப் பெற்ற தமிழ் நூல்களையும் இன்னும் அச்சில் வராத தமிழறிஞர் சிலரது ஆக்கங்களையும் அச்சுப்பதிவு செய்து அவற்றைத் தமிழ் பயிலும் மாணவரிடையே பரப்பும் பெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ.இளவழகனார் அவர்களுக்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. திரு.ந.சி.கந்தையாப்பிள்ளையின் எழுத்தாக்கங்களை முதலிலே வெளிக்கொணர்ந்து, அவற்றைத் தொடர்ந்து வித்துவான் தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி எனும் பதினேழு நூல்களைக் கொண்டப் பெருந்தொகுதியினை வெளியிட்டுள்ள நண்பர் இளவழகனார் இப்பொழுது யாழ்ப்பாணத்து அகராதியெனவும், மானிப்பாய் அகராதியெனவும் அழைக்கப்பெறும் கையகராதியினை வெளியிடுகின்றார். இவ்வெளியீடு பற்றி இவ்வெளியீட்டின் ஈழத்து முகவர் திரு.பத்மசீலன் என்னிடத்துக் கூறியபொழுது ஈழத்தின் ஆய்வாளர்கள் இருவரது குறிப்புரைகளைப் பெறுவது நலம் எனக் கூறினேன். ஒருவர் ஈழத்துத் தமிழ் கிறித்தவ இலக்கியங்களைத் தமது சிறப்பு ஆய்வுத்துறையாகக் கொண்டு அத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளவரான பேராயர் வண.எஸ்.ஜெபநேசன் ஆவார். இவர் தென்னிந்திய திருச்சபையின் யாழ்மறை மாவட்டப் பேராயராக இருந்தவர். மற்றவர் ஈழத்திலக்கியத்தைக் குறிப்பாக பதினேழு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளுக்குரிய ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைத் தமது சிறப்பு ஆய்வுத்துறையாக கொண்டுள்ள பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா ஆவார். இவர்கள் இருவரது குறிப்புரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. அக்குறிப்புரைகள் இரண்டும் இந்த அகராதி பற்றிய விளக்கங்களைத் தருகின்றன. தமிழகத்தில் யாழ்ப்பாணத்து அகராதியென்றும், மானிப்பாய் அகராதியென்றும் குறிப்பிடப்படுவது இக்கையகராதியே என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. இவ்வதிகார-தியின் தமிழ்ப் பெயரை தரும் பக்கத்தினில் சில முக்கிய செய்திகள் உள்ளன. முதலாவது இதற்குத் தொகுத்தோர் வழங்கிய பெயர் 'பெயரகராதி' என்பதாகும். அப்பக்கத்தின் கீழ்ப்பாகத்தில் தரப்பட்டுள்ள குறிப்பு மிக முக்கியமானது. சாலிவாகன சகார்த்தம் தஎளசுநக்குச் சரியான கிருஸ்து வருஷம் 1842இல். நிகழாநின்ற பிலபவருஷம் யாழ்ப்பாணத்துக்குச் சேர்ந்த மானிப்பாய் அமேரிக்காமிசியோன் அச்சுக்கூடத்தில் அச்சுப்பதிக்கப்-பட்டது. இதன் மூலம் 'யாழ்ப்பாண' 'மானிப்பாய்' எனும் பெயர்கள் கிட்டியதற்கான காரணம் புரிகிறது. அகராதியென்பது அதன் உருவிலும் உள்ளடக்கத்திலும் மேலைத்தேய பண்பாட்டுவழி வந்ததாகும். தமிழ் மரபில் நிகண்டு முறைமையே உண்டு. அம்முறைமையினுள் அகராதியிற் கிடைப்பன போன்ற சொல்லுக்கான கருத்து தரப்படாது. மாறாக சொற்கள் தொகுதி-களாக தரப்படும். சிவனுக்குரிய பெயர்கள் கடலுக்குரிய பெயர்கள் என தொகுதி முறையிலேயே வரும். உண்மையில் ஆங்கில மரபுப்படி இவை (ளலழெலெஅள) ஒரு பொருளுக்கான பல பெயர்கள் எனவே கொள்ள வேண்டும். தமிழ் மக்களிடையே தமது மதத்தைப் பரப்ப முனைந்த முதற்பெரும் பாதிரியார் முதலே அகராதி முறைமை வழியாக தமிழைத் தமது விளக்கப்பதிவிட் கொண்டு வருவதற்கு மேலைநாட்டு மரபுவழி வந்த அகராதி முறைமையைக் கையாண்டுள்ளனர். (வீரமாமுனிவரும் சதுகராதி) புரட்டஸ்தாந்தக் கிறித்தவர்கள் இம்முயற்சியில் அறிவியல் பூர்வமான அணுகுமுறைமையையே மேற்கொண்டனர். இவர்களுள்ளும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கப் புறப்பட்ட மிசனரிமார்-கள் தொடக்கத்திலிருந்தே அகராதி முயற்சியில் ஈடுபட்டனர். ஜோஸப் நைற் (முniபாவ) பற்றி பேராயர் ஜெபனேசன் தந்துள்ள செய்திகளை நோக்குக. ஜோசப் நைற் (முniபாவ) மெதடிஸ்ட் மிசன் பாதிரியாராகிய பர்சிவலுடன் இணைந்து தொழிற்பட்டார் என்பது மிக முக்கியமான செய்தியாகும். இந்த பர்சிவல்தான் ஆறுமுகநாவலரின் ஆரம்பகால உந்து ஆற்றலாக விளங்கியவர். இந்த அகராதி முயற்சிகளை இன்னொரு முறையிலும் எடுத்துக் கூறலாம். அதாவது, தமிழின் எழுத்தறிவுப் பாரம்பரியத்தைப் பாதிரிமார் தமதாக்கிக் கொள்ள எடுத்த முயற்சிகளுள் ஒன்று இது ஆகும். தொடக்கத்திலே கைந்நூலாகத் (ஆயரெயட) தொடங்கிப் பின்னர் 'வழக்கும் செய்யுளுமாகிய' இரண்டையும் ஒன்றிணைத்துப் பார்க்கின்ற வின்சுலோ அகராதி வரை தொடர்கின்றது. அகராதி முறைமையின் வருகை மூலம் தமிழின் நவீன மயப்பாடு நிச்சயமாக்கப்படுகின்றது. முதலிற் பிற பண்பாட்டாளர்களுக்குப் பயன்பட்ட அகராதிகள் பின்னர் தமிழரின் தமிழ்ப் பயில்வுக்கே இன்றியமையாதனவாகின்றன. இப்பொழுது மீளச்சுப் பெறும் இக்கையகராதிக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தறிவுப் பாரம்பரியத்தின் நிலைமையை இது நமக்குக் காட்டுகின்றது. அந்த அளவில் தமிழ்மொழி, இலக்கியம் பயில்வோருக்கு இது ஒரு முக்கியமான நூலாகும். திரு.கோ.இளவழகனார் தமிழ்க் கல்வியுலகின் வாழ்த்துக்குரியவராகின்-றார். இம்மீளச்சுப் பதிவினை அது தோன்றிய ஈழத்தில் மீட்டும் பரப்புவதற்கு காரணராகவுள்ள திரு.பத்மசீலனுக்கு நமது நன்றி உரித்து. கார்த்திக்கேசு சிவத்தம்பி ஆ.யு.Phனுஇனு.டுவைவ தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 01-12-2005
tam
தி லயன் கிங் திரைப்படத்தில் இளவரசன் சிம்பா பிறந்ததும், அமைச்சர் பொறுப்பில் உள்ள பபூன் குரங்கு ஒன்று சிம்பாவை மலை முகட்டில் ஏந்திப் பிடித்து வனத்தில் இருக்கும் பிற விலங்குகள் அனைத்திற்குமாக என கூறி அடுத்த அரசனாக தூக்கி பிடிக்கும். பின்னர் சித்தப்பாவின் நயவஞ்சகத்தால் சிம்பா காணாமல் போக நீங்க நாட்களுக்கு பின்னர் மீண்டும் பபூன் குரங்கின் கைகளில் கிடைக்கும். இந்த காட்சிகள் நிஜமாக அரங்கேறியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள குருகர் தேசியப் பூங்காவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தேசியப் பூங்காவில் தாயில்லா சிங்கக் குட்டியை தூக்கிச் சென்று மகிழ்வாக விளையாடும் பபூனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது . ஹர்ட் ஸ்கல்ட்ஸ் (Kurt Schultz) என்பவர் பபூன் குரங்கு ஒன்று சிங்க குட்டி ஒன்றை தன் உடன் தூக்கி சென்று விளையாடும் விடியோவை பதிவு செய்துள்ளார். இந்த சிங்க குட்டி தனது தாயை இழந்து தவித்து வந்த நிலையில் பபூன் வகையைச் சேர்ந்த குரங்கு ஆதரவு அளித்து தன்னுடன் வைத்து பாதுகாத்து வருகின்றது. இந்தக் குரங்கு நிலத்தில் திரியும் குட்டி சிங்கத்தை தான் மரத்தில் தாவும் போதெல்லாம் உடன் தூக்கிச் செல்கின்றது. தனது குட்டியை போல பாதுகாத்து பத்திரமாக வைத்துக்கொள்ளும் ஆண் பபூனின் இந்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகின்றது. பபூனின் இந்த செயல் தி லயன் கிங் திரைப்படத்தில் இளவரசன் சிம்பாவை பாதுகாக்கும் பபூனின் செயலை போன்று உள்ளதாக ட்விட்டரில் இந்த புகைப்படம் வைரலாகிறது.
tam
வடக்கு மாகாணத்தில் பல்லேறு திணைக்களங்களின் பிடியில் பயன்பாடின்றிக் சிக்கிக் கிடக்கும் நிலங்களை விடுவித்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய செய்கையை மேம்படுத்துவதே தமது நோக்கம் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலுணவு மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளம் சார்ந்த உணவு வகைகளில் இந்த நாட்டை தன்னிறைவு காணச் செய்வதும் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்து அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டிக் தமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயாலாளர் நாயகம் என்ற வகையில் நாடாளுமன்றில் இன்று(20.08.2020) உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்> இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாமும் கடுமையாக உழைத்து, ஒத்துழைப்பு வழங்குவதே எமதும் முக்கிய நோக்கமாக இருக்கின்றது. அந்தவகையில்> எமது புலம்பெயர் உறவுகளுக்கு ஓர் அழைப்பினை விடுத்திருந்தேன். அதாவது> இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். எமக்கு முந்திய ஆட்சிக் காலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தவர்வகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் போன்று எதிர்காலத்தில் இடம்பெறாது என்ற உத்தரவாத்தினையும் வழங்கியுள்ளேன். அடுத்ததாக> கடற்றொழில் அமைச்சின் மூலமாக குறிப்பாக, கரையோர மற்றும் அழ்கடல் கடற்றொழிலை நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் விரிவாக்கஞ் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம்> நன்னீர் உள்ளிட்ட அனைத்து நீரியல் வளச் செய்கைகளை மேலும் பரவலாக்கி மேம்படுத்தும் ஏற்பாடுகளும் இத்துறையை மனைக் கைத்தொழிலாக முன்னெடுக்கக்கூடிய ஏற்பாடுகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் கடற்றொழில் மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளச் செய்கை கைத்தொழில்கள் மூலமாக நாட்டு மக்களிடையே போசாக்கினை வளர்ப்பதும்> இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் எமது முக்கிய நோக்கமாகும். அதேபோன்று> ஜனாதிபதியினது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதன் அடிப்படையில்> வடக்கில் காண்பபடும் விவசாயத்திற்கு பொருத்தமான காணிகள் அனைத்திலும் விவசாய நடவடிக்கையை மேற்கொண்டு நெல் உள்ளிட்ட உப உணவுப் பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்வதன் ஊடாக> அவற்றின் இறக்குமதிகளை நிறுத்தி> உணவு உற்பத்தியில் எமது நாட்டை தன்னிறைவு காணச் செய்வதே எமது ஆரம்ப இலக்காகும். அதன் அடுத்த இலக்கு ஏற்றுமதிக்கான வழியேற்படுத்தலாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளாா் #வடக்கில் #திணைக்களங்கள் #காணிகள் #விளைநிலங்கள் #டக்ளஸ்தேவானந்தா #கடலுணவு
tam
Menu ஜோதிடம் இன்றைய செய்திகள் வணிகம் நம்ம ஜில்லா! தொழில்நுட்பம் கல்வி & வேலை ஸ்டார்ட்அப் லைஃப் ஸ்டைல் பொழுதுபோக்கு சுற்றுலா விளையாட்டு விவசாயம் ஆன்மீகம் Sun ,Jun 11, 2023 ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் நாள் காதலர் எதிர்ப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் எப்படி இருக்கிறதோ காதலர் எதிர்ப்பு தினமும் கொண்டாடப்படுகிறது. காதலர் வாரம் எப்படி உள்ளதோ, அதே போல காதலர் எதிர்ப்பு வாரமும் உள்ளது. இது அதிகாரப்பூர்வ காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் நாளுக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. காதலால் துயரங்களையும், கஷ்டத்தையும் அனுபவித்தவர்களைக் கொண்டாடும் வகையிலேயே காதலர் பிரேக் அப் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பல்வேறு கட்ட காரணங்களும் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம். காதல் தானே என சாதாரணமாக நினைத்து விடுபவர்களுக்கு மத்தியில் காதலால் ஏற்பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் பட்டவர்கள் ஏராளம். இது அவர்களுக்கான தினம் ஆகும். இந்த தினத்தில் காதலித்து பல்வேறு கட்ட கஷ்டங்களைக் கடந்து தனியாக தன் வாழ்க்கையில் போராடும் நபர்களுக்கான தினமாகும். இந்த தினமானது, பிப்ரவரி நாள்களில் காதலுக்கான பட்டியலில் கடைசி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை அனைவரும் கொண்டாடுவதில்லை. ஆனால், காதலில் பிரச்சனைகளைச் சந்தித்து, முறிவு ஏற்பட்டு வாழ்க்கையில் தனியாக இருக்க கூடிய நபர்களைக் கொண்டாடும் வகையில் காதலர் எதிர்ப்பு வாரம் கொண்டாடப்பட்டது. இந்த தினமானது, காதலர்கள் எப்படி காதல் பிரிவிலிருந்து வெளியேறினார்கள் என்பதையும் எடுத்துக் கூறும் விதமாக அமையும். இந்த தினமானது காதலர்கள் தனது அன்புக்குரியவரைத் தவற விட்டவர்களைக் கொண்டாடும் விதமாக அமைவதாகும். உறவுகளில் பிரிவுகள் ஏற்படுவது வழக்கம். அதற்கென ஒரு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர், நம்மை நேசிக்காமல் நம்மை விட்டுச் செல்லும் போது அதிகமாக வலிக்கிறது. இந்த நாளில் ஒரு நபர் எப்படி இருக்க வேண்டும் என்ற குழப்பம் எழும். அதாவது பிரேக் அப் டே ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தருமா.? இல்லை கஷ்டத்தைத் தருமா.? இந்த பிரேக் அப் டே தினமானது ஒருவருக்குக் கஷ்டத்தை வழங்கக் கூடிய தினமாக இருப்பினும், அதனை மாற்றி சந்தோஷமாக இருப்பதைக் காட்ட வேண்டும். இது ஒருபுறம் உங்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்தாலும், மறுபுறம் நீங்கள் பிடிக்காத ஒரு உறவிலிருந்து வெளிவரும் தினமாகவும் அமையும். எப்படியானாலும், காதலர் தினமாக இருந்தாலும் சரி அல்லது காதலர் எதிர்ப்பு தினமாக இருந்தாலும் சரி. உங்களது வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக மாற்றி அதற்கு ஏற்றாற் போல வாழ வேண்டும். இந்த சிறப்பான தினத்தில் அனைவரும் தேவையில்லாத கஷ்டங்களையும், துன்பங்களையும் மறந்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க பிரேக் அப் டே தின வாழ்த்துக்கள். Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
tam
End of preview. Expand in Data Studio

Dataset Card for "pair_tamil_malayalam_ipa"

More Information needed

Downloads last month
63